search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்றத்தூரில் குழந்தைகள் கொலை"

    கள்ளக்காதல் விபரீதமாக பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி புழல் ஜெயலில் கடந்த 4 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் தனது வாழ்க்கையே பறிபோனதாக புலம்புவதாக தெரியவந்துள்ளது. #KundrathurAbirami
    சென்னை:

    சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி அதிகாரி மனைவி அபிராமி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளை கொன்று தப்பினார்.

    நாகர்கோவிலில் பிடிபட்ட அவரை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ருசிக்கும் குணம் உடையவர்.

    கணவர் வேலைக்கு சென்றபின்பு செல்போனில் ‘டப்ஸ்மாஸ்’ செயலியில் மூழ்கி நடிகர்-நடிகைகளின் வசனங்களுக்கு ஏற்ப நடித்து படம் பிடிப்பார்.

    இதற்காக செல்போனில் ‘மியூசிக்கலி’ என்ற செயலி உள்ளது. அதை டவுன்லோடு செய்தால் அதில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களின் டப்ஸ்மாஸ்கள் இருக்கும். அதில் அபிராமி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

    கள்ளக்காதலனான பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் மட்டுமல்லாது வேறு சில இளைஞர்களுடன் இணைந்து ‘டப்ஸ்மாஸ்’ விளையாடி இருக்கிறார்.

    தனது வீட்டுக்கு அருகில் உள்ள பிரியாணி கடையில் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுவார். அப்போது கடை ஊழியருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. ஒரு தடவை கணவர், குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடி இருக்கிறார். அதன்பிறகு பெற்றோர் அவரை கண்டித்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்து இருக்கிறார்கள்.

    இதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதை எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாக இருந்த குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதில் கணவரையும் கொல்ல அபிராமி திட்டமிட்டார். அவர் பணி நிமித்தமாக இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் தப்பினார்.

    சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் விரக்தியுடன் காணப்பட்டார். 4 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் சிறையில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு முதல் உதவி அளித்து அவரை சாப்பிடச் செய்தனர்.

    தற்போது சக கைதிகளிடம் லேசாக பேசி வருகிறார். சிலரிடம் தனது நிலையை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். நானும் சுந்தரமும் மியூசிக்கலில் டப்ஸ்மாஸ் செய்து சேர்ந்தோம். அதன் பிறகு எங்களிடையே நட்பு ஏற்பட்டு எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று கதறியுள்ளார். #KundrathurAbirami
    ×